districts

திருத்தணி ஆர்டிஓ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (ஜூலை 22), திருத்தணி ஆர்டிஓ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சி.பெருமாள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் ஜி.சம்பத்,  ஏ.அப்சல்அகமது,  வி.அந்தோணி, பாலாஜி, நேதாஜி, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ஸ்ரீநாத் ஆகியோர் பேசினர்.