தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசு ஊழியர்கள் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் சந்திரன் செயலாளர் கல்யாண சுந்தரம், முன்னாள் செயலாளர் நடராஜன், நிர்வாகிகள் ஜெகதாம்பிகா, நந்தகுமார் கலந்து கொண்டனர்.