districts

img

ஜிஎஸ்டி வரியை நீக்க கோரி ஆர்ப்பாட்டம்

மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் வி.அருள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் துவக்கி வைத்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஜனார்த்தன், மாவட்ட பொருளாளர் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர்.