districts

img

குடும்ப அட்டை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஜன.31- புதிதாக விண்ணப்பம் செய்து காத்தி ருக்கும் அனைவருக்கும் குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்க கோரி வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரச் செயலாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் யாசர் அராபத், சுகுமார், ஆனந்த்,  கரும்பு விவசாயிகள் சங்கம் தலைவர் பெ.அரிதாசு, ஓய்வு பெற்ற மின் ஊழியர் சங்கம் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஊழியர் சங்க நிர்வாகி பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.