பெரம்பூர் சத்தியமூர்த்தி நகரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக உதவித்தொகை கேட்டு பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் ஆர்.நடராஜன் தலைமையில் மாவட்டத் தலைவர் ஆர் ஜெயச்சந்திரன், செயலாளர் எஸ்.ராணி, பொருளாளர் ஜெயந்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எம்.ராஜ்குமார், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம் ஆகியோர் பேசினர். இதில் நிர்வாகிகள் முரளி, பாத்திமா, தர்மன், அப்துல், தில்சாத் பேகம், குருமூர்த்தி, கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் சிறப்பு வட்டாட்சியரிடம் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.