districts

img

பழங்குடி இன மக்களுக்கு குடிமனை பட்டா, அடிப்படைவசதி கேட்டு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஜூலை 5- பழங்குடி இன மக்க ளுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் அண்மையில் திருவள்ளூர் ஆர்.டி.ஒ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவள்ளூர் வட்டத் திற்கு உட்பட்ட மப்பேடு கே.கே.நகர், குப்பத்துப் பாளையம், விளாப்பாக்கம், திருப்பாசூர் வசந்தம் நகர், ஏகாட்டூர், குமரச்சேரி, ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட திருக் கண்டலம் அண்ணா நகர், அரியத்தூர் அப்துல் கலாம் நகர், மெய்யூர் வெம்பேடு, வாழ்ந்தான் கோட்டை,  பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்குழிமேடு, பாரிவாக்கம், ஆவடி வட்டத்திற்கு உட்பட்ட நெமிலிச்சேரி, விளிஞ்சியம் பாக்கம் உள்ளிட்ட பகுதி களில்  ஊருக்கு ஒதுக்குபுற மான இடங்களில் காலம் காலமாக பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வரு கின்றனர். இவர்களில் பலருக்கு குடிமனை பட்டா, தொகுப்பு வீடுகள், இனச் சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்கள் கல்வி, சுகாதாரம் இன்றி வறுமையில் வாழும் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் விளை வாக ஒரு சில கிராமங்க ளில் குடிமனை பட்டா, குடி நீர் போன்ற அடிப் படை தேவைகள் நிறை வேற்றப்பட்டுள்ளன.  இந்நிலையில் அனைத்து பழங்குடியின ருக்கும் இனச் சான்றிதழ், பட்டா, தொகுப்பு வீடுகள், வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும், 2006 வன உரிமைச் சட்டத்தின் படி அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது. 20 நாட்களில் தீர்வு காண ஆர்டிஒ உறுதி ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சங்கத்தின் தலைவர்கள் திரு வள்ளூர் கோட்டாட்சியர் கற்பகத்திடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் இனச் சான்றிதழை உடனடியாக வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றும், பட்டாக்கள் வழங்கப்பட்ட இடங்களை சுத்தம் செய்து, பயனாளி களுக்கு 20 நாட்களில் அளவீடு செய்து தரப்படும் என்றும் உறுதியளித்தார். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆர்.தமிழ்அரசு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொரு ளாளர் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், மாவட்ட துணைத் தலைவர் பி.ரவி, மலைவாழ்  மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் இ.கங்காதுரை, மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.கீதா,  ஒன்றிய நிர்வாகிகள் கே.முருகன், டி.டில்லி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.