வெண்மணி தியாகிகளை கொச்சைப்படுத்தி பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து வெள்ளியன்று (பிப்.2) தி.நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வே.இரவீந்திரபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.வேணுகோபாலன், பகுதி நிர்வாகிகள் சிவக்குமார், விஜயா உள்ளிட்டோர் பேசினர்.