அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வெறுப்புணர்வு பேச்சைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி வடசென்னை மாவட்டம் சார்பில் வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே வியாழனன்று (டிச. 19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்ட தலைவர் எம்.ராஜ்குமார், செயலாளர் வி.ஜானகிராமன், பொருளாளர் வீ.ஆனந்தன், மாதர்சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, சிபிஎம் ராயபுரம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி ஆகியோர் பேசினர்.