திருப்பத்தூர்,நவ.23- திருப்பத்தூர் சாராட்சியர் அலுவலகம் அருகே, குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறுமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் - வீரபத்திரன், பொருளாளர் அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க தலைவர் பி. டில்லி பாபு கலந்து கொண்டார். திருப்பத்தூர் சாராட்சியர் அலு வலகத்தில், நிலுவையில் உள்ள குரு மன்ஸ் இன சான்றுக்கான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து குருமன்ஸ் பழங்குடி இன சான்று உடனடியாக வழங்க வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, பெற்றோருக்கு இனச் சான்றிதழ் இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு குறு மன்ஸ் சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.