districts

img

பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை ஊதிய நிலுவைத் தொகை இரண்டு மாதங்களாக வழங்காமல் மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து, திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் சத்யா தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ஆர். சிவாஜி, தாலுகா நிர்வாகிகள் எம். தமிழ்செல்வி, ஆர். வெங்கடேசன், சி. பச்சையப்பன், எம். ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எஸ்.லில்லி நன்றி கூறினார்.