கள்ளக்குறிச்சி, நவ. 19 – கால்நடை தீவனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.45, எருமை பாலுக்கு ரூ.54 என கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ.19) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் வீ.சுரேஷ் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.வி.ஸ்டாலின்மணி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத் மாவட்டத் தலைவர் டி. ஏழுமலை, மாவட்டச் செயலாளர் பி.தெய்வீகன், பொருளாளர் எஸ்.கோவிந்தன், ஜி.அருள்தாஸ், எல்.ராமசாமி, டி.சாமிநாதன், ஆர். செல்வராஜ், இருந்தை எஸ்.ஆரோக்கியதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். தரமான கால்நடை தீவனங்களை தமிழ்நாடு அரசு 50 விழுக்காடு மானிய விலையில் வழங்க வேண்டும், என்றும் வலியுறுத்தினர்.