districts

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுக

சென்னை, நவ. 30- ஏழை எளிய மக்களுக்கு மின்சாரத்தை எட்டாகனியாக்கும் மோடி அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை  மாவட்டக்குழு சார்பில் வியாழ னன்று (நவ. 30) 5 மையங்களில் ஆர்ப்பாட்டம், மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன் கூறுகையில், மக்கள் விரோத ஒன்றிய அரசு 2025 டிசம்பருக்குள் இந்தியாவில் அனைத்து வீடு களிலும் ஸ்மார்ட் மீட்டரை பொருத்த  வேண்டும் என மாநில அரசுகளை நிர்ப்பந்திக்கின்றது. ஸ்மார்ட் மீட்டர் என்பது நுகர்வோரின் நலனுக்கு எதிரானது. சிறுதொழில்கள், விவசாயம், நெசவாளர் உள்ளிட்டு வீடுகளுக்கு வழங்கப்படும் அரசின்  100 யூனிட் இலவச மின்சாரத்தை படிப்படியாக பறிக்கும் நடவடிக்கை யாகும். செல்போனை ரீசார்ஜ் செய்தால் எப்படி பணம் இருக்கும் வரை மட்டும்  பேச முடியுமோ அதைப் போலவே ஸ்மார்ட் மீட்டரை ரீசார்ஜ் செய்தால்  தான் மின்சாரத்தை பயன்படுத்த முடியும். ஒவ்வொரு மணி நேரமும்  நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஏற்ற வகையில் ரீசார்ஜ் அட்டையில் இருக்கும் பணம் குறைந்து கொண்டே போகும். அதில் பணம் இல்லை என்றால் மின்சாரம் தானாகவே துண்டிக்கப்படும். மேலும் பீக் ஹவரில் கூடுதலாக  கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், மின்பற்றாகுறை காலங்க ளில் அதிக கட்டணம் யார் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்படும் என்றும்  கூறப்படுகிறது. இது நுகர்வோர் களுக்கு மட்டும் எதிரானது அல்ல. மின்சார துறையில் பணியாற்றும் பல ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். எனவே மக்களின் நலன் கருதி  கேரள மாநிலத்தில் இந்த திட்டத்தை  நிராகரித்தது போல் தமிழ்நாடு முதலமைச்சரும் நிராகரிக்க முன்வர வேண்டும் என்றார். ராயபுரத்தில் பகுதி குழு  உறுப்பினர் டி.வெங்கட் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, பகுதிக்குழு உறுப்பினர்கள் சா.முருகேசன், அண்ணாமலை, முனியாண்டி, முனு சாமி, எம்.சி. ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் கே.செல்வானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். பின்னர் உதவி செயற்பொறி யாளர் ஆனந்தனை சந்தித்து மனுக்களை அளித்தனர். அம்பத்தூரில் பகுதிச் செயலாளர் ஆர்.கோபி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவணதமிழன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி,சிந்தரராஜ், சு.லெனின் சுந்தர், பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.சீனிவாசன், எம்.பகத்சிங், பிரபு, எஸ்.எஸ்.சுப்பிர மணியன் (எலக்ட்ரிகல் சங்கம்), சு.பால்சாமி, ஜி.மூர்த்தி (சிஐடியு), தசரதன், குப்பன் (மின் ஊழியர் மத்திய அமைப்பு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அம்பத்தூர் கோட்ட செயற்பொறியாளர் மலை வேந்தனை சந்தித்து பொது மக்களிடம் பெற்ற மனுக்களை அளித்தனர்.

ஆவடியில் பகுதிச் செயலாளர் ஏ.ஜான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ம.பூபாலன், பகுதி குழு உறுப்பினர்கள் ராபர்ட் ராஜ், நடராஜன், லதா, சரவணன், கணேஷ்  ராவ் (மின் ஊழியர் மத்திய அமைப்பு) உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். முன்னதாக ராமரத்னா திரையரங்கம் அருகில் இருந்து ஊர்வலமாகச் சென்று ஆவடி கோட்ட செயற்பொறியாளர் எஸ்.ராஜேசனை (பொறுப்பு) சந்தித்து மனுக்களை அளித்தனர். கொளத்தூரில் பகுதிச்செயலா ளர் பா.ஹேமாவதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பி னர் வி.குப்புசாமி, பகுதிக்குழு உறுப்பினர்கள் அயூப்கான், நாகலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். பின்னர் செம்பியம் இணை பொறியாளர் நிஜந்தனை சந்தித்து மனுக்களை அளித்தனர். மணலியில் பகுதிச்செயலாளர் டி.பாபு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ரவிக்குமார், பகுதிக் குழு உறுப்பினர்கள் எஸ்.முருகன், ஜி.சிட்டிபாபு, ஏ.அண்ணா துரை, ஏ.துரைராஜ், எஸ்.நீலவேணி,  பி.பத்மநாபன், ஜெ.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். பின்னர் மணலியில் உதவி பொறி யாளர் வெங்கடேசன், மாத்தூர் எம்.எம்.டிஏ.வில் உதவி பொறியாளர் மனோகரன், சாத்தங்காடு உதவி பொறியாளர் கதிரவன், மணலி புதுநகரில் உதவி பொறியாளர் பிரேமா ஆகியோரை சந்தித்து மனுக்களை அளித்தனர்.