குஜராத் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்டு ‘இந்தியா மோடிக்கான கேள்விகள்’ ஆவணப் படத்தை ஒன்றிய அரசு தடை செய்ததை கண்டித்து புதனன்று (பிப்.1) அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆவணப்படத்தை பார்ப்பதற்கு ஏதுவாக அச்சிடப்பட்ட ‘கியூஆர் கோட்’ கொண்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். வாலிபர் சங்கத்தின் வில்லிவாக்கம் பகுதி தலைவர் ஜெ.பி.யூஜின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 98வது வார்டு கவுன்சிலர் ஆ.பிரியதர்ஷினி மற்றும் ஜோதி (மாதர் சங்கம்) கே.பி.நிகில் (வாலிபர் சங்கம்), மார்டின் (சிஐடியு), டி.எம்.சதாசிவம் (மாற்றுத்திறனாளிகள் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.