ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட், கேஸ் விலை உயர்வைக் கண்டித்தும், ரேசன்கடைகளை திறக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி லாசுப்பேட்டை உழவர் சந்தை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் கொளஞ்சியப்பன், சத்தியா, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆனந்த, சஞ்சய், உழவர்கரை நகரச் செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.