districts

img

மக்களை பிளவுபடுத்த சிஏஏ சட்டத்தை கொண்டு வந்திருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மக்களை பிளவுபடுத்த சிஏஏ சட்டத்தை கொண்டு வந்திருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ராயபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜி.நித்தியராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.அபிராமி, மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், பொருளாளர் அ.விஜய், நிர்வாகிகள் ச.முருகேசன், எஸ்.கார்த்திக், வி.தீபா, சா.நீதிதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.