ஒன்றிய பாஜக அரசின் தமிழக மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிப் 4 அன்று திருத்தணி வட்டக் குழு சார்பில் கே ஜி கண்டிகை பஜார் வீதியில் வடக்குழு உறுப்பினர் சின்னதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் வி.அந்தோணி வட்டக்குழு உறுப்பினர்கள் கரி முல்லா, பாலாஜி, ஜெயவேல், பிருந்தாவனம், மாவட்ட குழு உறுப்பினர் அப்சல் அகமத் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் பேசினர் . கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை, கவரைப்பேட்டை, சுண்ணாம்புகுளம், ஆரம்பாக்கம், மீஞ்சூர், ஆரணி, ஆர்.கே.பேட்டை ஆகிய இடங்களில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.