districts

img

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் எம்.முபாரக் தலைமை தாங்கினார். முகில் தம்மப்பிரியன், இ-யாஸ் சர்க்கார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. செல்வன், வட்டார செயலாளர் எ.லடாசுமணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி. எம். பிரகாஷ், சிபிஐ தாலுகா செயலாளர் எஸ். சர்தார், மக்கள் ஒற்றுமை மேடை எஸ். ராமதாஸ்,கே. யாசர் அராபத், ஏ. அப்துல் காதர், வில்சன் ரஜினிகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சத்யராஜ், கே. நவாப் ஜான் உள்ளிட்டோர் பேசினர்.