districts

img

பேரம்பாக்கத்தில் நீர்நிலை அருகே உள்ள கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

திருவள்ளூர்,நவ.22-  பேரம்பாக்கத்தில் நீர் நிலைகளை ஆக்கிர மித்துள்ளதாக கூறி அங்குள்ள கட்டிடங் களை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி யாக இடித்து அகற்றினர்.  தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலை களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வும், நீர் நிலைகளை பாதுகாக்கவும் சென்னை  உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டி ருந்தது. அதனடிப்படையில் திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் சாலையின் அருகே செல்லக் கூடிய நீர்நிலை இடத்தில் ஆக்கிரமித்து கட்ட ப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டும் என  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. அதன் பேரில் நீர்நிலை ஆக்கிர மிப்புகளை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிடட்டது. இதனைத் தொடர்ந்து  மாவட்ட வருவா த்துறை அதிகாரிகள் நீர்நிலை ஆக்கிரமிப் புகளை தங்களாகவே அகற்றிக் கொள்ளு மாறு முறையாக நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் கடைக்காரர்கள் யாரும் நீர்நிலை யில் கட்டப்பட்ட கடைகளை அகற்ற முன்வர வில்லை. இதனைத் தொடர்ந்து வியாழன்று  35 கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட னர். அப்போது கடைக்காரர்கள் தங்களது கட்டிடத்தை இடிக்க வந்த வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கடை களை அப்புறப்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறி வாக்குவாதத் தி்ல் ஈடுபட்டனர். இருப்பினும் கால அவ காசம் கொடுக்க முடியாது என தெரிவித்த வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து தரமட்டமாக்கினர்.