districts

img

அப்பாவரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் இடிப்பு: குழந்தைகள் அவதி!

திருவள்ளூர், ஆக. 2- கும்மிடிப்பூண்டி அப்பாவரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டதால் வகுப்பறையின்றி குழந்தைகள் அவதிக்கு ஆளாகிவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள மங்காவரம் ஊராட்சிக்கு உட்பட்ட அப்பாவரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அங்காடிகள் வாடி கட்டிடம் செயல்பட்டு வந்தது. இங்கு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த மையத்திற்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில் அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்துள்ளது என கூறி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாமலேயே அங்கன்வாடி கட்டிடம் இடிக்கப்பட்டது.  பழுதடைந்த அங்கன்வாடி கட்டி டத்தையும் முழுமையாக இடிக்காததால் சுவர்கள் அந்தரத்தில் தொங்குகிறது. இதனால் குழந்தைகளுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் பெற்றோர்கள் உள்ளனர். மேலும் அங்கன்வாடி மையத்தின் மின் இணைப்பு துண்டிக்காமல்  வளாகத்தில் மின் கம்பிகள் ஆபத்தான நிலையில் கிடப்பதால்,  குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் வளாகத்தில் விஷ பாம்புகளில் நடமாடும் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் வட்டத் தலைவர் இ.ராஜேந்திரன், துணைத் தலைவர் ஜோதி, வார்டு உறுப்பினர்கள் ஜெயந்தி மனோகர், சூரியபிரகாஷ், பாரதி குணசேகரன் ஆகியோர் இது குறித்து தெரிவிக்கையில், உடனடியாக அங்கன்வாடி மையத்தை கட்ட வேண்டும், பள்ளி வளாகத்தில் குடிநீர், கழிப்பறை கதவுகள், கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியை சீரமைக்க வேண்டும், வளாகத்தில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.