districts

img

அம்பேத்கர் படிப்பகத்தை இடித்துவிட்டு நியாய விலை கடை கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு

செங்கல்பட்டு, நவ.28- திம்மாவரம் ஊராட்சியில் அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்கும் ஒன்றிய கவுன்சிலரின் நோக்கம் பொதுமக்கள் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், திம்மாவரம் ஊராட்சியில் அமைந்துள்ள அம்பேத்கர் நகரில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கான வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் பகுதிநேர ரேசன் கடையை அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டித்தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இது தொடர்பாக செங்கல்பட்டு வட்டாட்சியர், உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் ரேசன் கடை கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்யப்பட்டது. நிர்வாக பொறியாளர் ஆய்வு செய்து வட்டாட்சியர் தேர்வு செய்த சர்வே எண் 1114 இடத்தில் ரேசன் கடை கட்டுமாறு வட்டார பொறி யாளரிடம் கூறியுள்ளனர் . ஆனால் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் அருள்தேவி என்பவர் அம்பேத்கார் படிப்பக கட்டிடத்தை இடித்துவிட்டு ரேசன் கடை கட்டப்போவதாக கூறினார்.  இந்நிலை யில் கடந்த 16.9.2024 ல் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்திருந்தனர். மனுவை பரி சீலனை செய்த ஆட்சியர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று படிப்பக கட்டிடத்தை இடிக்கக்கூடாது என்றும் வருவாய்துறை ஒதுக்கிய இடத்தில் ரேசன் கடை கட்டுமாறும் உயர் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். ஆனால் இதுவரை ரேசன் கடை கட்டுமான பணிகள் துவங்கப்படவில்லை. மேலும் இதுகுறித்து சிறுகுறு மற்றும் நடுத்தரத் துறை அமைச்சர் அன்பரசு இடமும் மனு கொடுத்து முறையிட்டிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சித் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகளை கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டுமென்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய கவுன்சிலர் அருள் தேவி அம்பேத்கர் படிப்பதத்தை இடித்து அப்புறப்படுத்த இயந்திரங்களுடன் வந்தி ருந்தார். அப்போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி அம்பேத்கர் படம் பதிந்திருந்த பெயர் பலகையை கிழித்து படிப்பகத்தை இடிக்க முயன்ற போது அம்பேத்கார் நகர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அம்பேத்கர் படிப்பகம் இடிப்பது தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவின் மீது எந்த நட வடிக்கையும் எடுக்காமல் படிப்பகத்தை இடிக்க முயன்றபோது கிராம மக்கள் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கவுன்சிலரும்அதிகாரிகளும் படிப்பகத்தை விட்டு விட்டு திரும்பிச்சென்றுள்ளனர். அரசு ஒதுக்கிய இடத்தில் நியாய விலை கடையை கட்டாமல் அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க வந்து அங்கிருந்த அம்பேத்கர் படத்தை கிழித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்நிலையில் மனு கொடுத்தவர்களையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் ஒன்றிய கவுன்சிலர் அருள் தேவி தொடர்ந்து மிரட்டி வருவதாக வும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.