districts

img

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வட சென்னையில் 4 மையங்களில் ஆர்ப்பாட்டம்

சென்னை, செப். 12- ஏழை, எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி மாதம்தோறும் மின் கணக்கீடு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் திங்களன்று (செப். 12)   4 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோக நாதன், பகுதிச் செயலாளர் தீபா,  திருவொற்றியூர் பகுதிச் செயலாளர்  கதிர்வேல், ராயபுரம் பகுதிச்செயலா ளர் எஸ்.பவானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆவடியில் மாநிலக் குழு உறுப்பி னர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பூபாலன், பகுதிச் செயலாளர் ஏ.ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பூர் சர்மா நகரில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், பகுதிச் செயலாளர் ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அம்பத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.பூபாலன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுந்தரராஜ், பகுதிச்  செயலாளர் ஆர்.கோபி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;