districts

img

100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க கோரிக்கை

சிதம்பரம், ஆக 19- சிதம்பரம் குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஒன்றிய பொருளாளர் செல்வகாந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செய லாளர் ஜெயக்குமார், ஒன்றிய தலைவர் தண்டபாணி, மாவட்ட குழு உறுப்பினர் பொன்னம்பலம், ஒன்றிய துணைத் தலைவர் கமலா உள்ளிட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர்,  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும், சம்பள பாக்கி உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜியிடம் மனு அளிக்கப்பட்டது.