திருவண்ணாமலை, ஜூலை 12- நீர்வரத்து ஓடை ஆக்கி ரமிப்பை தடுக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, வாசுதேவன் பட்டு கிராமம் அருகே உள்ள மேலப்புஞ்சை கிராம ஏரிக்கு, இறையூர் சித்தேரியில் இருந்து தண்ணீர் வரும் வகையில், நீர்வரத்து ஓடை அமைந்துள்ளது. தற்போது அந்த நீர் ஓடையின் அருகே உள்ளவர்கள், ஓடையையும் சேர்த்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால், மேலப்புஞ்சை கிராம ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல், நிலத்தடி நீர் குறைந்து விட்டது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி, குப்பநத்தம் நீர் தேக்கத்தில் இருந்து, மேலப்புஞ்சை கிராம ஏரிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என அந்த மனுவில் வலி யுறுத்தப்பட்டுள்ளது.