சென்னை, மார்ச் 2- 2011 முதல் 2022 வரையிலான 11 ஆண்டுகளில் உயர் வகுப்பு பெட்டி கள் 190 விழுக்காடு அதிகரித்துள் ளது. அதாவது 100 பெட்டிகளில் இருந்து 290ஆக அதிகரித்து இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்துள் ளது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கை 100இல் இருந்து 115ஆக மட்டுமே அதிகரித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே தினசரி பல கோடி பயணி களை கையாண்டு வருகிறது. இதில் பெரும்பாலானோர் சாமானிய மக்கள் தான். குறைந்த டிக்கெட் கட்டணம், நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற வசதி, சொகுசு அனுபவம் எனப் பல்வேறு விஷயங்கள் சாதகமாக இருக்கின்றன. ஆனால் முன்பதிவில்லா பெட்டிகளில் நெரி சல் காரணமாக மக்கள் தொடர்ந்து தவிக்கும் நிலையை காண முடி கிறது. இதனால் முன்பதிவு பெட்டிகளில் அனுமதியின்றி ஏறிக்கொண்டு மற்ற பயணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்து கின்றனர். ரயில் எஞ்சின்களை கூட விட்டு வைப்பதில்லை. அங்கேயும் ஏறி நெருக்கடி கொடுக்கின்றனர். வந்தே பாரத் ரயில்களிலும் ஏறி நின்று கொண்டு பயணிக்கும் அவல நிலையை பார்க்க முடிகிறது. இத்தகைய சிக்கல்களை தீர்க்க முன் பதிவில்லா ரயில்களையும், பெட்டி களை அதிகரிக்க வேண்டும். என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் முன்பதிவில்லா பெட்டி களை திடீர் திடீரென்று குறைக்கும் நடவடிக்கையில் இந்தியன் ரயில்வே ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன் கூறுகையில், முன்பதிவில்லா பெட்டியில் 102 இரு க்கைகள் மட்டுமே உள்ளன. ஆனால் கேட்கும் அனைவருக்கும் டிக்கெட் விற்பனை செய்து விடுகின்றனர். கழிவறையில் கூட நின்று கொண்டு பயணிக்கின்றனர். லாபம் மட்டுமே குறிக்கோள் தற்போதைய சூழலில் முன்பதி வில்லா பெட்டியில் 500 பேர் வரை பயணம் செய்கின்றனர். ஒரு வரைய றையே இன்றி லாபம் சம்பாதிப் பதை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படுகின்றனர். 1950க்கும் 2024க்கும் இடையி லான காலகட்டத்தில் ரயில்களை பயன்படுத்தும் பயணிகளின் எண் ணிக்கை 16 மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் பெட்டிகளின் எண்ணிக்கை 5 மடங்கு தான் அதிகரித் துள்ளது. உதாரணமாக ஒரு ரயிலில் படுக்கை 4 பெட்டிகள் இருப்பதாக வைத்து கொண்டால் 400 காத்தி ருப்பு பட்டியலில் இருக்கிறது. இவர்களுக்கு பதிவு செய்த டிக்கெட் உறுதி ஆகவில்லை எனில் முன்பதிவு பெட்டிகளில் ஏறுவார்கள். இல்லையெனில் முன்பதிவில்லா பெட்டிகளில் ஏறுவார்கள். ஆனால் முன்பதிவில்லா பெட்டிகளில் ஏற்கெனவே 17 பெட்டிகளுக்கு 9,600 டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு பயணிகள் நெரிசலில் சிக்கி தவிக் கின்றனர். எனவே நிறைய ரயில்களை புதிதாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று தெரி வித்தார்.