தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றியுள்ள ‘நில ஒருங்கிணைப்புச் சட்டம்-2023ஐ திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடலூரில் மாவட்ட தலைவர்கள் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், ஜெ.சிவக்குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் ஆர்.கே.சரவணன், வி.எம்.சேகர், துணைத் தலைவர்கள் எஸ்.தட்சணாமூர்த்தி, பி.கற்பனைசெல்வம், மக்கள் அதிகாரம் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.