திருவள்ளூர், பிப்.7- கும்மிடிப்பூண்டி பாரத் பெட்ரோலியம் எல்பிஜி பிளான்டில் பணி புரியும் லோடிங் அன்லோடிங் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி சிஐடியு சார்பில் வியாழனன்று (பிப்.6), ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பெட்ரோலியம் எல்பிஜி பாட்டிலில் பிளான்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பணியாற்றி வருகின்றனர். ஊதிய உயர்வு குறித்து கடந்த ஜனவரியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.அர்ஜுனன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் கே.விஜயன், சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார் லோடிங் - அன்லோடிங் தொழிலாளர் சங்கத்தின் கிளை தலைவர் செல்வம்,பரத், பிரசாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.