districts

img

குருமன்ஸ் இன மக்களுக்கு எஸ்டி சாதிச் சான்று வழங்கக் கோரிக்கை

திருப்பத்தூர், அக் 17 - திருப்பத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட சு.பள்ளிப்பட்டு, பாச்சல் ஆகிய கிராமங்களில் 3 தலை முறையாக வசிக்கும் குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கு எஸ்டி சாதிச் சான்று வழங்கக் வேண்டும் என்று  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் தலைமையில் சாராட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில் சு.பள்ளிப்பட்டு, பாச்சல் பகுதியில் வசிக்கும் கெம்பண்ணன், வீரபத்திரன், ரகு உள்ளிட்ட 8 பேர் தந்தை மற்றும் உறவினர்க்களுக்கு எஸ்டி சான்று வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்த அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு சாதிச் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட சாராட்சியர், உரிய முறையில் ஆய்வு செய்து சாதிச் சான்று வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் சி.எஸ்.மகாலிங்கம், குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் வீரபத்திரன், சிபிஎம் திருப்பத்தூர் தாலுகா செயலாளர் எஸ்.காமராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.