districts

img

சாதி மறுப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை

திருவண்ணாமலை, ஜன. 25- திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டி வட்டம், முருக பாளையம் கிரா மத்தில் வசிக்கும் செல்சியா (22) என்பவர் செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத் தில் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் தவசி கிரா மத்தைச் சேர்ந்த சந்தோஷ் (22) என்பவரும் காதல் கொண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.  இதைத் தொடர்ந்து, செல்சியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களால், சந்தோஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் உயிருக்கு அச்சுறுத்தல்  ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தங்களுக்கு உரிய பாது காப்பு அளிக்க வேண்டும் என திருவண்ணா மலை மாவட்டம் செய்யாறு காவல் துறை யிடம் புகார் மனு அளித்தனர்.  இந்த நிகழ்வின் போது மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப. செல்வன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இரா. சரவணன், மாவட்ட செயலாளர் மாரிமுத்து, சிபிஎம் தாலுகா செயலாளர் சதீஷ், மாவட்டக் குழு  உறுப்பினர் டி .வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.