திருவண்ணாமலை, பிப்.5- புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட இருளர் இனமக்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு 0திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்தில் வாசுதேவம்பட்டு, இறையூர் மற்றும் இளந்தோப்பு கிராமங்களில் இருளர் இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். குடியிருக்க வீடின்றி தவித்துவரும் அம்மக்களின் வாழ்விடத்தை ஆய்வு செய்ய வியாழனன்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் செங்கம் நகருக்கு வருகை தந்தார். அப்போது பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, 20க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க கோரி மனு அளித்தனர். சிபிஎம் தாலுகா செயலாளர் பி.கணபதி, வாலிபர் சங்க நிர்வாகி ரஞ்சித் மற்றும் பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர்.