districts

img

தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க சிக்னல் அமைக்கக் கோரிக்கை

கூடுவாஞ்சேரி, ஜன.7- தேசிய நெடுஞ்சாலையில் மனித உயிரி ழப்புகள் மற்றும் விபத்துக்களை தவிர்க்க செங்கல்பட்டு மாவட்டத்தில் பொத்தேரி, பாரேறி, தித்தேரி  உள்ளிட்ட பகுதிகளில் சிக்னல் அமைத்திட வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொத்தேரி பேருந்து நிறுத்தம் அருகில்  தையல் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எம்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்கவேண்டும்,  மறைமலைநகர் தொழிற்பேட்டை (டான்சி பேருந்து நிறுத்தம்) பணிக்கு வந்து செல்லும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க ஏதுவாக எஸ்கலேட்டருடன் நடைமேம்பாலம் அமைத் திட வேண்டும். தானியங்கி நடைமேடை  பெருங்களத்தூர் முதல் பரனூர் வரை உள்ள அனைத்து பேருந்து நிறுத்தம் மற்றும் ரயில்வே நிலையத்தை பயன்படுத்தும் பொது மக்கள் தேசிய நெடுஞ்சாலையை பாது காப்புடன் கடக்க வசதியாக எஸ்கலேட்ட ருடன் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எரியாத மின் விளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத் தப்பட்டது. கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி, மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் எஸ்.குணசேகரன், லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி சிங்கை கணேஷ், போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகி வி.நாராயணன், விவ சாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பி.சண்முகம், கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் டி.பாபு, சிஐடியு மாவட்ட குழு  உறுப்பினர் கே.சம்பத் உள்ளிட்ட பலர் பேசினர்.