districts

img

பழங்குடி மக்கள் வசிக்கும் தெள்ளாறில் பொதுகழிவறை அமைக்கக் கோரிக்கை

திருவண்ணாமலை,ஆக.23- தெள்ளாறு பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் பொதுக்கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று மக்களுடன் முதல்வர் திட்ட கூட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறு பகுதி யில் மக்களுடன் முதல்வர் திட்டகூட்டம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.மாரி முத்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தெள்ளாறு ஊராட்சியில் சார்பதிவாளர் அலுவலகம் அருகே, 15 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பம் நீண்ட காலமாக வசித்து வருகிறது. அப்பகுதியில் பொது கழிவறை கிடை யாது. இதனால், அந்த மக்கள் இயற்கை உபாதை களுக்காக திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, பொதுக்கழிவறை அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.