districts

img

கடற்படை விமான தளம் ராஜாளிக்கு பாதுகாப்பு செயலாளர் திடீர் வருகை

அரக்கோணம், ஜன. 15- இந்தியக் கடற்படையின் முதன்மையான கடற்படை விமான தளமான  அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளிக்கு பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ் குமார் சிங், வருகை தந்தார்.  அவரை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி கமாடோர் கபில் மேத்தா வரவேற்று இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் தயார்நிலை மற்றும் இந்த தளத்தின் செயல்பாடு கள் குறித்து விளக்கினார். பாது காப்புச் செயலர் நிலையத்தில் உள்ள பல்வேறு வசதிகளை பார்வையிட்டார்.  அங்கு ஐஎன்எஸ் ராஜாளியால் மேற்கொள்ளப்பட்ட விரிவான செயல்பாடுகள் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.  ஐஎன்எஸ் ராஜாளியில் பணியாற்றும் கடற்படை வீரர் வீராங்கனைகளுடன் பாது காப்புத்துறை செயலர் கலந்து ரையாடினார்.  தேசிய கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பைப் பாராட்டினார்.  புவிசார் அரசியலில் நிலப்பரப்பு  மற்றும் கடற்பகுதி பாதுகாப்பில்  ஏற்படும் சவால்களுக்கு ஏற்ப தயார் நிலையில் இருக்க வேண்டி யதன் அவசியத்தை அவர் எடுத்து ரைத்தாக பாதுகாப்பு துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.