districts

img

   கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தீர்மானகரமான வெற்றி

புதுதில்லி, மே 13-

     கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு எதிராகத்  தீர்மானகரமான வெற்றியை காங்கிரஸ் பெற்றுள்ளது என்றும், பாஜகவின் மதவெறிப் பிரச்சா ரத்தை நிராகரித்த கர்நாடக மக்களுக்கு  வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது என்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

   கர்நாடகத் தேர்தல் முடிவு தொடர்பாக,  கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது:

     கர்நாடக மக்கள் சட்டமன்றத் தேர்த லில் பாஜகவைத் தீர்மானகரமாக நிராக ரித்திருக்கிறார்கள். பாஜகவுக்கு இந்தத் தோல்வி, அதன் அரசாங்கத்தின் ஒட்டு மொத்த தவறான ஆட்சி மற்றும் ஊழலின்  விளைவாகும். மேலும் இந்த வெற்றியா னது, பிரதமர் மோடியே தேர்தல் பிரச்சா ரத்தின்போது மேற்கொண்ட விஷத்தைக் கக்கிய மதவெறிப் பிரச்சாரத்தை மக்கள் நிராகரித்திருப்பதையும் காட்டுகிறது.

    மக்கள் மத்தியில் பாஜக ஆட்சிக்கு எதி ராக இருந்த கடும் எதிர்ப்பு உணர்வு, சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றிபெற வாய்ப்பளித்திருக்கிறது.

   பாஜகவுக்கு எதிராக வலுவான வெற்றியை அளித்துள்ள கர்நாடக மக்க ளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு வாழ்த்துகளை யும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

   இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.