districts

img

சிபிஎம் அகில இந்திய மாநாடு திருவள்ளூர் மாவட்டத்தில் 8 மையங்களில் கருத்தரங்கு நடத்த முடிவு

திருவள்ளூர்,ஜன.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு  திரு வள்ளூர் மாவட்டத்தில் 8 மையங்களில்  கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிபிஎம் 24 வது அகில இந்திய மாநாடு ஏப் 2 முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுவதையொட்டி மாவட்ட அளவில் வரவேற்புக்குழு மற்றும் கருத்தரங்கம் திருவள்ளூரில் ஞாயிறன்று (ஜன 26), நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம்  தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.தமிழ்அரசு வரவேற்றார். மாநாட்டையொட்டி மாவட்ட அளவில் 350 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. “இந்திய அரசியலமைப்பும் இந்துத்து வாவும்” என்கிற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்  திருமூர்த்தி  “இன்றைய அரசியல் சூழல்” என்ற தலைப்பிலும், அகில இந்திய மாநாட்டுப் பணிகள்” குறித்து கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினார்கள். அகில இந்திய மாநாட்டின் நோக்கங்களை விளக்கி 8 மையங்க ளில் கருத்தரங்கங்கள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது என்று மாவட்ட செயலாளர் எஸ். கோபால் கூறினார். வரவேற்பு குழு நிர்வாகிகள் அகில இந்திய மாநாட்டுக்கான மாவட்ட வரவேற்பு குழுவின் கவுரவத் தலை வர்களாக ப.சுந்தரராசன்,  கே.செல்வராஜ் ஆகியோரும்,  தலைவராக கே.விஜயன்,  செயலாளராக எஸ்.கோபால்,பொரு ளாளராக டி. பன்னீர்செல்வம்  உள்ளிட்ட 350 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டுள்ளது .நிறைவாக வட்டச் செயலாளர் எஸ்.கலையரசன் நன்றி கூறினார்.