திருவள்ளூர், ஜூலை 11- திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை யின் அடாவடி போக்கை கண்டித்து, வரும் ஜூலை 23 அன்று திருவள்ளூரில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகள் இடித்துதள்ளப்படுகின்றன. மாற்று இடம் கூட வழங்காமல் வீடுகள் அகற்றப்படு வதால், திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. ஆர்.கே.பேட்டை எஸ்.வி.ஜி.புரத்தில் திடீரென 54 வீடுகள் இடிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சியர் பிரபுசங்கர் பொறுப்பேற்றது முதல், சாதாரண மக்களை பற்றி கவலைப்படுவதில்லை. மாவட்ட ஆட்சியரின் தவறான நட வடிக்கையால் பழங்குடியினர், தலித் மக்கள், சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். தொழி லாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களிடமும் சரியான அணுகு முறை இல்லை. அண்மையில் ஆசி ரியர்களிடமும் சரியான அணுகுமுறை இல்லாததால், ஆட்சியரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளது. மாவட்டத்தில் விரைவு சாலைகளால் அமைக்க விவசாய நிலங்கள், குடியிருக்கும் வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பலமுறை மனுக்கள் மூலம் சுட்டிக்காட்டியும் ஆட்சியர் அலட்சியமாக உள்ளார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கரையும், மாவட்ட வரு வாய்த்துறையினரின் அடாவடி போக்கை யும் கண்டித்து வரும் ஜூலை 23 அன்று திரு வள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவள்ளூரில் உள்ள சிபிஎம் அலு வலகத்தில் புதனன்று (ஜூலை 10), நடை பெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு மதிமுக மாவட்ட செயலாளர் மு.பாபு தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகர், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், விசிக மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர், சிபிஐ மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், ஒன்றிய நிர்வாகி சி.குருமூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், ஆர்.தமிழ்அரசு, இ.மோகனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.