districts

img

மகளின் பிறந்தநாளை கொண்டாடிய தாய் தற்கொலை

அம்பத்தூர், ஜூலை 29-

    மகளின் பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடி விட்டு மன உளைச்சல் காரணமாக மின்சார ரயில் முன்பு பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

   அம்பத்தூர் அடுத்த அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிபாசு (40). இவரது மனைவி ரம்யா (37). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன், 10 வயதில் ஒரு மகள் உள்ளனர்.

   கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரம்யா வெள்ளிக்கிழமை இரவு, மகளின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு, தோழி வீட்டுக்கு செல்வதாகக் கூறி அண்ணனூர் ரயில் நிலையத்திற்கு சென்றார். அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

   தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி ரயில்வே காவல்துறையினர் ரம்யா உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்