districts

img

15 ஆண்டுகளாக தலைமறைவாகியிருந்த டாஸ்மாக் கொள்ளையன் கைது

காஞ்சிபுரம், செப். 1- பரோலில் வெளிவந்து 15 ஆண்டு களாக தலைமறைவாகி,  டாஸ்மாக் கொள்ளை வழக்கில் முக்கிய குற்ற வாளியான மோகன்குமார் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம், சால வாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சால வாக்கத்தில் உள்ள அரசு மது பானகடை (எண். 4544)- ஐ கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி நள்ளிரவு சுவரை துளையிட்டு அதிலிருந்த ரூ. 8.2 லட்சம் மதிப்புள்ள 107 அட்டைபெட்டிகளில் இருந்த மது பாட்டில்களை அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டது. மேலும், இவ்வழக்கின் முக்கிய குற்ற வாளியாக செயல்பட்ட கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம், சத்ராஸ் காவல் நிலைய கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று சேலம் மத்திய சிறையில் ஆயுள் சிறைக் கைதியாக இருந்த மோகன்குமார், 2009-ம் வருடம் மூன்று நாட்கள் பரோல் விடுப்பில் வந்து மீண்டும் சிறைக்கு செல்லாமல் சுமார் 15 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், சுதாகர் மற்றும் தலைமை காவலர் ரமேஷ் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த வெள்ளியன்று கடுகுப்பட்டு கிராமத்தில் தலைமறைவாக இருந்த மோகன்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.