districts

img

மாரியம்மன் கோவிலுக்குள் பிரவேசித்த தலித் மக்கள்

திருவண்ணா மலை,ஆக 2-

      திருவண்ணாமலை மாவட்டம், செல்லங்குப்பம் கிராமத்தில் பொதுப் பிரிவை சேர்ந்த 300 பேரும், பட்டியல் இனத்தை சேர்ந்த 200 பேரும் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இதில் பொது பிரிவினர் மட்டும் சாமி கும்பிட்டு வந்தனர். கடந்த 50 வரு டங்களுக்கு மேலாக பட்டி யல் இன மக்கள் யாரும் கோயிலுக்கு செல்லாத நிலை இருந்தது.

    இந்த சூழலில், தாங்க ளும் கோயிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என தலித் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை பின்னணியில், கடந்த ஜூன் மாதம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் ப.செல்வன், மாவட்டச் செயலாளர் எஸ்.ராமதாஸ் ஆகி யோர் செல்லங்குப்பம் கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.  

    அப்போது,  பட்டியலின மக்கள் மாரியம்மன் ஆல யத்திற்குள் சென்று வழி படும் வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து, சமரச கூட்டம்  நடைபெற்றது. அதன்படி, புதன்கிழமை (ஆக 2) பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபடலாம் என, காவல்துறையும், மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

    வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் திருவண்ணாமலை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில், 500 க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு, பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்தனர்.