districts

ஆமை வேகத்தில் நகரும் சாலை பணி: தலித் மக்கள் புகார்

விழுப்புரம், டிச.5- மேல்மலையனூர் அருகே பருதிபுரம் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணி விரைந்து முடிக்க வேண்டும் என்று தலித் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலை யனூர் வட்டத்திற்குட்பட்ட பருதிபுரம் ஊராட்சி மன்றம் . பெரும்பான்மையாக வசித்து வரும் தலித் மக்கள், தங்கள் பகுதிக்கு சாலை அமைத்துத் தர வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.  இந்த நிலையில், பள்ளிக்கூடத்தி லிருந்து பருதிபுரம் தலித் குடியிருப்பு பகுதி வரை சுமார் 2 கிலோ மீட்டர் ரூ.42 லட்சம் மதிப்பில் சாலை அமைப்பதற்கு ஒப்புதல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சாலை பணியை தொடங்கி வைத்தார். நான்கு மாதம் கடந்தும் இதுநாள் வரையில் 20 விழுக்காடு பணிகள் கூட முடிக்கவில்லை. இதனால், தற்போது பெய்து மழை வரும் மழையால்  போக்கு வரத்து தடைப்பட்டுள்ளது. ஆனால் தலித் மக்கள் அவதிப்பட்டு வருவதால் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.