districts

img

சுதந்திர தினத்தில் தலித் தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் அரசுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

விழுப்புரம், ஜூலை 7- சுதந்திர தினத்தில் தலித் ஊராட்சி மன்றத் தலை வர்கள் தேசிய கொடி ஏற்று வதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டம் ஜூலை 7அன்று விழுப்புரத்தில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், பொரு ளாளர் இ.மோகனா, துணைத் தலைவர் ஜி. ஆனந்தன், துணைப்பொது செயலாளர் ப.செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். நாடு சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு தயா ராகிக் கொண்டிருக்கிறது.தேசத்தின் இறை யாண்மைக்கும் தற்சார்புக் கும் அடித்தளமான பொதுத் துறை நிறுவனங்களும், நிதி ஆதாரங்களும், இயற்கை வளங்களும் ஒரு சில பெருமுதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. எனவே தேசத்தின் விடு தலை விழுமியங்களை பாது காக்க ஒன்றுபட்டு போராட வேண்டிய காலம் இது.  இந்நிலையில் மக்களில் ஒரு பகுதியினரின் உரி மையை மற்றொரு பகுதியி னர் மறுதலிக்கிற கொடுமை யும் தொடர்கிறது. குறிப்பாக சுதந்திர தினத் தன்று, தேசியக்கொடி ஏற்று வதற்குக் கூட தமிழகத்தின் பல தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனு மதிக்கப்படுவதில்லை.  2020இல் திருவள்ளூர் ஆத்துப்பாக்கம், 2021 இல் வில்லிசேரி, அயன்வட மலபுரம் மற்றும் ராமநூத்து, அரியநாயகிபுரம்  முத்தை யாபுரம், கே.துரைசாமிபுரம் ஆகிய 6 ஊராட்சிகளில் தலித் தலைவர்கள் கொடி ஏற்றமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொடி யேற்ற விடாமல் தடுக்கப் பட்ட செய்தியே கூட வெளி வராமல் இன்னும் பல மாவட்டங்களில் தடுக்கப் பட்டிருக்ககூடும்.  எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்து தலித் ஊராட்சி மன்றத் தலை வர்களையும் தொடர்பு கொண்டு,தகுந்த பாது காப்பு வழங்கி தலித் ஊராட்சி மன்றத் தலை வர்கள் கொடி ஏற்றுவதை உறுதி செய்திட வேண்டும் என இந்த கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.