திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் திங்களன்று இரவு வீசிய சூறாவளி காற்றில் சிக்கி 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சேதமடைந்த வாழை விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் வருவாய்த் துறை மூலம் கணக்கெடுப்பு செய்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.