ராணிப்பேட்டை, டிச.4 - மிக்ஜம் புயல் மற்றும் தொடர் மழை காரணமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு துறைகள் சார்பாக பல்வேறு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 47 புயல் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இவற்றில் 8 முகாம் களில் மழையினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசித்து வரும் 268 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பாக அளிக்கப்பட்டு வரு கிறது. நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம், ஊராட்சி ஒன்றியம், உத்திரம்பட்டு ஊராட்சியில் மழைநீரால் பாதிப்பு ஏற்படும் குடிசை பகுதிகளில் வசிக்கும் 10 இருளர் இன குடும்பங்களை அரு கில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப் பட்டுள்ளனர். முகாமில் தங்க வைக்கப்பட் டுள்ள மக்களை மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் திங்க ளன்று (டிச. 4) நேரில் சந்தித்து அவர் களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளவும், தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்ப டுத்தி தரவும், பட்டா இல்லாத வர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க, ஏற்கெனவே வீட்டு மனை பட்டா உள்ளவர்களுக்கு வீடு வழங்க வும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து காவேரிப்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்டு ஏரியில் நீர் கொள்ளளவு மற்றும் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.இதனை தொடர்ந்து கர்ணாவூர் ஊராட்சியில் மழை பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதி களில் வசிக்கும் 9 குடும்பங்களை சார்ந்த 34 நபர்கள் கர்ணாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்கவைக்கப் பட்டு அவர்களுக்கு மருத்துவ பரி சோதனை மேற்கொள்ளப்படுவதை யும், தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி, மாவட்ட வருவாய் அலு வலர் ந. சுரேஷ், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை க. லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, வட்டாட்சியர் பாலசந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சைசுதின், வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.