districts

img

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் கடலூர் மின்னரங்க மாநாடு வலியுறுத்தல்

கடலூர், நவ.10- மின்வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பண்ருட்டியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட மின்னரங்க மாநாடு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. கடலூர் மாவட்ட மின்னரங்க மாநாடு பண்ருட்டியில் கே.பழனிச்சாமி நினைவு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) நடைபெற்றது. கட்சிக் கொடியை எஸ்.பன்னீர்செல்வம் கொடியேற்றி வைத்தார். மாநாட்டிற்கு என்.தேசிங்கு  தலைமை தாங்கினார். ஆறுமுகம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் துவக்கி வைத்து பேசினார். இடைக்குழு செயலாளர் டி. பழனிவேல் வேலை அறிக்கை சமர்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். கிளை செயலாளர் எஸ். வெங்கடேசன் நன்றி கூறினார்.  இடைக்குழு தேர்வு மாநாட்டில் 11 பேர் கொண்ட இடைக்குழு தேர்வு செய்யப்பட்டது. செயலாளராக என்.தேசிங்கு தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் தமிழக மின் வாரியத்தை 4 கம்பெனிகளாக பிரித்து உள்ளதை கைவிட வலியுறுத்தியும், ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய கோரியும், பகுதிநேர பணியாளர்களை நிரந்தரம் செய்திடக் கோரியும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.2023 முதல் புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த கோரியும்  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.