கடலூர் உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் எஸ்.அனு , நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் தங்கபிரபாகரன், துணை இயக்குநர் வேளாண் வணிகம் பூங்கோதை உட்பட பலர் கலந்துகொண்டனர்.