கடலூர் மாவட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவராகவும், அறிவொளி இயக்க செயல் பாட்டாளராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த ஆர்.லட்சுமணன் (82) சிதம்பரம் சிவசக்தி நாகரில் உள்ள அவர் வீட்டில் உடல் நலக்குறைவால் கடந்த 21-ந்தேதி காலமானார். இதனையறிந்த கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது குடும்பத்தினரை திங்கள் கிழமை மாலை சந்தித்து ஆறுதல் கூறினார். சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்ட கட்சியினர் அப்போது உடன் இருந்தனர்.