கடலூர், அக்.2 – காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.கடலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வாயில் முன்பு காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பொது நிகழ்ச்சிகளில் சைகை மொழி பெயர்ப் பாளர்களை நியமிக்க வேண்டும், கல்வித் தகுதி அடிப்படையில் வேலையும் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடும் அமலாக்க வேண்டும், தனி யார் துறை வேலைவாய்ப் பில் முன்னுரிமை வழங்க வேண்டும், மாற்றுத்திற னாளிகளுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் இலவச செல்போன் வழங்க வேண்டும், மாதாந்திர உதவித்தொகை 5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கள் கலந்து கொண்டனர்.எம்.வசந்தகுமார் தலைமை தாங்கினார் பி. சிவக் கொழுந்து, ஜி.ராஜராஜன், கே.சாமிதுரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்டத் தலைவர் ராம. நடேசன், மாவட்டச் செயலா ளர் ஆர்.ஆளவந்தார் மாவட்ட பொருளாளர், எஸ்.கோபாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.