கடலூர்,ஏப்.10- கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலை யில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமானது. கடலூர் சிப்காட் பகுதியில் ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ரசாயன மூலப்பொருட் களை தயாரித்து வருகின்றன. சிப்காட் செம்மங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள “ஆர்கிமா பேராக்சைடு” எனப்படும் ரசாயன தொழிற்சாலை ‘ஆர்கானிக் பேராக்சைடு’ என்னும் ரசாயனத்தை தயாரித்து வருகிறது. இங்கு தயாரிக்கப்பட்ட ரசாயனங்கள் ஒரு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென புதன்கிழமை அதிகாலை அந்த ரசாயனப் பொருட்கள் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து அங்குள்ள ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து தீ தடுப்பு சாதனங்களை பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் போகவே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலூர் சிப்காட் பகுதியில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் ‘ஆர்கானிக் பேராக்சைடு’ ரசாயனம் எரியும் போது தண்ணீரால் கட்டுப்படுத்த முடியாது என்பதால் அந்த ரசாய னம் முழுவதுமாக எரிந்தால் மட்டுமே தீ கட்டுக்குள் வரும் என தெரிய வந்தது. சுமார் 2 மணி நேரம் அந்த ரசாயனம் முற்றிலுமாக எரிந்த பிறகே தீ கட்டுக்குள் வந்தது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்புடைய ரசாயனங்கள் எரிந்து நாசமாகியிருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.