கடலூர், மார்ச் 27- கடலூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே. விஷ்ணு பிரசாத் சிபிஎம் அலு வலகத்தில் காரல் மார்க்ஸ் சிலைக்கு புதனன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்தியா கூட்டணி சார்பாக கடலூர் மக்களை தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்த வேட்பாளர் விஷ்ணு பிரசாத், காரல் மார்க்ஸ் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி ஆதரவு கோரினார். இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் டி. ஆறுமுகம், ஜே. ராஜேஷ் கண்ணன், மாநகர செய லாளர் ஆர்.அமர்நாத், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ். கே.பக்கீரான், ஆர்.ஆள வந்தார், எஸ். தட்சிணா மூர்த்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர. திமுக மாநகர செயலாளர் கே. எஸ்.ராஜா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.