districts

img

கியூபா பாதுகாப்பு கையெழுத்து இயக்கம்

திருவள்ளூர், அக்.9- கியூபாவை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு கையெழுத்து இயக்க பிரச்சாரம்  உலக புரட்சியாளர் சேகுவேரா வின் நினைவு தினமான திங்களன்று (அக் 9), திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கி யது. பத்து நாட்களுக்குள் தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் கையெழுத்துகளை பெற இந்திய மாணவர் சங்கம் திட்டமிட்டுள்ளது.  வகுப்பறை, கல்லூரி நுழைவாயில், மைதானம், பேருந்து நிறுத்தம், விடுதி, நூலகம் போன்ற மாணவர்கள் கூடும் இடங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் துவக்க நிகழ்ச்சியாக திங்களன்று (அக் 9), கவரைப்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டிக்சன் தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் 5,000 மாண வர்களிடம் கையெழுத்து பெறுவது என்ற வகையில் மாணவர்கள் கையெழுத்து இயக்கம் கவரைப்பேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.