சென்னை, ஜூலை 6- சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியிலிருந்து மொத்தம் 28 மாண வர்கள் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் கோடைகால பயிற்சிக்கான வாய்ப்பை பெற்று ள்ளனர். சிஎஸ்ஐஆர் ஜிக்யாசா இபிஐசி ஹேக்கத்தான் 2024ல் மாணவர்கள் சிறப்பாக திட்டங்களை சமர்ப்பித்ததன் விளை வாக இந்தப் பயிற்சிக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சமர்ப்பிக்கப்பட்ட 960 திட்டங்க ளில், 7-9 வகை பிரிவில் 42 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் ஆர்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியிலிருந்து 14 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவர்களுக்கு இம்மாதம் முதல் ஹைப்ரிட் முறையில் இரண்டு மாத பயிற்சியாக இருக்கும்.